கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் பணமதிப்பிழப்பு விவகாரம் கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தற்போது கோவை ரயில் நிலையத்தில் ஸ்கைவாக்,எக்ஸ்லேட்டர் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் எனவும் தெரிவித்தார்.
போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் அகல ரயில் பாதை திட்டத்துக்கானபணிகள் 95% முடிவடைந்துள்ளது என தெரிவித்த அவர் கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகளுக்கான டெண்டரை யாரும் எடுக்க முன் வரவில்லை எனவும் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு நடவடிக்கை கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் ஹரிசங்கர் வர்மா அப்போது தெரிவித்தார்.